வெள்ளி, 23 ஜூலை, 2010

அமர்நாத் பனிலிங்க தரிசனம்


ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், 2 லட்சத்து 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.
காஷ்மீரின் தெற்கு பகுதியில், இமயமலை மீது, 3 ஆயிரத்து 888 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கான பனிலிங்க யாத்திரை, கடந்த 30ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை, 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமர்நாத் யாத்திரை, அமைதியாகவும், எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. குகையில் உள்ள இயற்கையான லிங்கத்தை, இன்றுவரை, 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். ஜம்முவில் உள்ள பஹல்காம் மற்றும் பல்தால் முகாம்களிலிருந்து, 10 ஆயிரத்து 36 பேர், தரிசனத்துக்காக புறப்பட்டு விட்டனர்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆயிரத்து 477 ஆண்கள், 603 பெண்கள், 54 குழந்தைகள், உள்ளிட்ட 2 ஆயிரத்து 358 பேர், கடும் குளிர் மற்றும் மழைக்கு மத்தியில், அமர்நாத் லிங்கத்தை தரிசிப்பதற்காக, ஜம்முவில் உள்ள கீழ் முகாமுக்கு பாதுகாப்புடன் புறப்பட்டுவிட்டதாக, மாநில போலீஸார் கூறியுள்ளனர்.
















கருத்துகள் இல்லை: