வியாழன், 12 மே, 2016

காட்டு செல்லியம்மன்



திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், தண்டலம் அடுத்த சூலைமேனி ஊரிலிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் செங்கரை கிராமத்தில் அருள்மிகு காட்டு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
வியாழக்கிழமைகளில் சூலைமேனியிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மற்ற நாட்களில் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன.

பலருக்கு குல தெய்வமாக இருப்பது காட்டுக்குள் இருக்கும் அம்மன். வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் அந்த அம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபடுவார்கள். பிள்ளைச் செல்வம் வரம் வேண்டுவோர் ஒன்பது வாரம் வந்து வணங்கி பலன் பெற்று குழந்தைக்கு, ‘செல்லன்’ ‘செல்லி’ எனப் பெயர் சூட்டி மொட்டை அடித்துக் காது குத்துவார்கள். நோய் நொடி தீர வெற்றிலை மாலை சார்த்துவார்கள். திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்ளுவதும் பிரார்த்தனையாக வஸ்திரத்தைக் கிழித்து பீரை மரத்தில் கட்டிப் பலன் பெறுவதும், எதிரிகள் வாய்க்குப் பூட்டுப் போடும் பழக்கமும் நடைமுறையில் உள்ள கோயில் அது.


இத்தனை நடைமுறைகள் பொதுமக்களால் பின்பற்றப்பட்டாலும் கோபுரம் மண்டபம், விமானம், கருவறை, கொடி மரம், பலி பீடம் எனத் தனித்தனியான ஸ்தூல அமைப்புகள் எதுவும் இல்லாத கோயில் அது. சுற்றிலும் சுமார் 36 ஏக்கர் பரப்புள்ள காட்டில் அமைந்த இயற்கைக் கோயில்.


திருவள்ளூர் மாவட்டம் செங்கரை கிராமத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு காட்டுச் செல்லியம்மன் கோவில். காட்டை ஒட்டி ஏரி, ஏரியின் மறு கரையில் ஊர். ஏரிக் கரையில் செக்கச் செவேல் என அம்மன் காட்சி தந்ததால் செங்கரை என அந்தக் கிராமம் வழங்கப்படுகிறது. சிறிய வெற்றிலையைப் போல் இரண்டு மடங்கு தடிமனும் சிறிய அளவும் உள்ள, சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் இலைகள் உள்ள கொடி உள்ளது. அந்த இலையில் வாசம் எதுவும் இல்லை.கொடியில் பால் வருவது இல்லை.

கொடியில் பூ பூப்பது, காய் காய்ப்பது, பழம் உண்டாவது இல்லை. ஒவ்வொரு மார்கழி முடிந்து தை மாதம் வரும் போது இலைகள் எல்லாம் கொட்டி பங்குனி மாதம் 15 தேதிக்குள் புத்திலைகள் தோன்றி புது நிழல் தரத் துவங்கிவிடும். இந்தத் தன்மை கொண்ட வேதைக் கொடி என்னும் தாவரத்தின் பந்தல் ஓரிடத்தில் ஆழக்கால் பதிந்து, கிளை பரப்பியுள்ளது. காலங்காலமாய் காட்டுச் செல்லியம்மன் என அழைக்கப்படும் இந்த தெய்வத்தின் மேல் அமைந்துள்ள அந்த வேதைக்கொடி பசுமையாய் அழகாய் பந்தலாய் படர்ந்து நின்று அம்மனுக்கும் பக்தர்களுக்கும் நிழல் தருகிறது.

அசுரனை அழித்தவள்

பெண்கள் பிற ஆடவரைத் தீண்ட மாட்டார்கள் என்பதால் தன்னை வென்று அழிப்பதானால் அது ஒரு பெண்ணால்தான் நடைபெற வேண்டும் என்று தாருகாசுரன் வரம் பெற்றிருந்தான். தேவர்களுக்கும் மக்களுக்கும் கடும் துன்பம் தந்துகொண்டிருந்தான். அவனைக் கொல்ல சிவன், சக்திக்குக் கட்டளையிட்டார். சக்தியின் கண்ணிலிருந்து நஞ்சை, விடக் கொடிய ஒரு விஷ சக்தி தோன்றியது. அந்தச் சக்தியின் கோபாக்னியில் தாருகன் எரிந்து சாம்பலானான்.

அந்தக் கோப சக்தி ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அந்தக் குழந்தைக்கு மேலும் மேலும் விஷம் கலந்த பாலை ஊட்டி மேலும் விஷ சக்தி நிறைந்ததாக உருவாக்கினாள் கோபாவேசத்தில் இருந்த சக்தி. எதிர் நாளில் அந்தக் குழந்தை கொடூரமானதாக இருக்கும் என்பதால் சிவன் அந்த விஷக் குழந்தையையும் அதன் பாலையும் தன்னுள்ளேயே ஒடுக்கிக் கொண்டார். கோப சக்தியின் விஷக் குழந்தை ஒடுக்கப்பட்டதால் சக்தி மூர்க்கம் கொண்டு ஆடி குதித்து ஆங்காரத்துடன் கோர தாண்டவம் ஆடினாள். ஆடலரசன் அவளது ஆட்டத்தை அடக்க எண்ணித் தன்னுடன் நாட்டியமாடப் போட்டிக்கு அழைத்தார்.


இருவரும் வெகு நேரம் சளைக்காமல் ஆட, நடுவில் தன் காதினை அலங்கரித்துக்கொண்டிருந்த தோடினை அவிழ்ந்து விழச் செய்து, மீண்டும் ஆட்டத்தின் நடுவே தன் காலால் எடுத்துப் பொருத்திக்கொண்டார். அதனையும் ஆட்டத்தின் அங்கமாகவேக் கருதிய அந்த உக்ர கோப சக்தி அவ்வாறு ஆடுவது சாத்தியம் இல்லை என நின்றாள். அந்நேரத்தில் சண்டி, சிவனுடன் ஆடிய அந்த ‘சண்ட தாண்டவம்’ என்னும் போட்டியில் தோற்றதாகக் கருதினாள்.

புற்றுக்குள் அமர்ந்த சக்தி

சண்ட தாண்டவத்தில் தோற்ற அன்னை காளி, தன்னால் உருவாகி அடங்கிய குழந்தையின் அழுகுரல், காதைப் பொத்திக்கொண்ட போதும் ஒலிப்பதாக உணர்ந்தார் வழியும் கண்ணீரோடு வேகமாக ஊரின் வடக்குப் புறமாய் அமைந்திருந்த காட்டுக்குள் சென்று வேதைக்கொடிகள் பின்னிப் படர்ந்து இருந்த பந்தலின் கீழ் அமர்ந்தாள். தன் சுய உருவைப் புற்று கொண்டு மூடும்படி செய்தாள்.

அவ்வாறு வேதைக்கொடியின் கீழ், வந்து அமர்ந்த நாள் ஒரு வியாழக்கிழமை. புற்று பெரியதாக வளர்ந்த நிலையில் ஊரார் அது முதல் வியாழக் கிழமைகளில் வந்து பகலில் பொங்கலிட்டு, படையலிட்டு அவளைத் தங்கள் குலசாமியாக வழிபடத் தொடங்கினர். மாலை 6 மணிக்குக் காட்டை விட்டு வெளியேறும் வழக்கத்தையும் பழக்கத்தில் கொண்டனர்.

ஊரார் அந்தக் காலாகாரியை ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்று உத்தரவு கேட்டனர். சக்தி, ஒரு சிறுமியின் மீது அருளாக வந்து இறங்கி, தான் ஊருக்குள் வர விரும்பவில்லை என்றும் அவ்வாறு வந்தால் ஊருக்குள் குழந்தைகள் அழும் குரலோ, சண்ட தாண்டவத்தின்போது சிவன் கால் பதியும்போது ஏற்பட்ட உலக்கை இடிக்கும் சத்தமோ கேட்கக் கூடாது எனவும் கூறினாள். தான் எடுத்து வைத்துவரும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு காவு தர வேண்டும் எனவும் சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்தாள்.


எப்பாடு பட்டாவது தேவியை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்த ஊராரால் அருகில் உள்ள ஆலங்குளம்வரை மட்டுமே காவு கொடுத்து அழைத்துச் செல்ல முடிந்தது. உடன் அம்மன் மீண்டும் காட்டுக்குத் திரும்பி வேதைக்கொடி பந்தலின் கீழேயே அமர்ந்துவிட்டாள். அது முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருள் வழங்குவதும் மாலை 6 மணிக்கு மேல் வெளி வந்து காட்டைச் சுற்றி உலாவி அவளை வழிபடுவோரின் அல்லல்களைத் தீர்ப்பதும் காப்பதையுமே பழக்கமாகக் கொண்டிருக்கிறாள்.

கோயிலை விரும்பாத செல்லி

அம்மனுக்குக் கோயில் கட்ட உத்தரவு கேட்டபோது, அம்மனின் விருப்பம் கோயில் கட்டுவதல்ல என்பதை உணர்ந்தனர் மக்கள். புற்று நீக்கி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனர். அம்பாள் அனுமதிக்க, ஒரு வியாழக்கிழமையில் புற்றை சிறிது சிறிதாக அகற்ற தீச்சுடர் மகுடமும், நான்கு கரங்களும், சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில் சர்வ ஆபரணம் சூடியவளாய் காட்சி தந்தாள்.

அன்று முதல் அந்த இடத்திலேயே வேதைக்கொடிப் பந்தலின் கீழ் ஜன்னி, கொஞ்சை, கருங்காலி, வில்வம், தும்பி போன்ற மூலிகைச் செடிகள் சூழ இருந்து, அருள் செய்துவருகிறாள். தினமும் அபிஷேகமும் ஒரு கால பூஜையும் நடைபெறும். ஆடி மாதம் காய்கறி சீர் கட்டு என்னும் காய்கறி அலங்காரமும் கூழ் வார்த்தலும், சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உளுந்தால் வடை செய்து மாலையாக்கி அம்பாளுக்குச் சார்த்தி வழிபட்டு பக்தர்களுக்கும் ஊருக்கும் விநியோகம் செய்யும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.

ஞாயிறு, 1 மே, 2016

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்ட சிவன்



ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்தள்ளது சுருட்டப்பள்ளி. 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் உள்ளது.
மூலவர்: பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர், அம்மன்: மரகதாம்பிகை,  தலவிருட்சம்: வில்வம்.
துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு கூறினார்.
திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வரக் கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது அனைத்து தேவர்களும்,”சிவபெருமானே. இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என மன்றாடினார்.
உடனே சிவன் “விஷாபகரண மூர்த்தி“யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி, சிவனைத் தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் “நீலகண்டன்” ஆனார். விஷத்தைத் தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை” ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது.
பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம்.
சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், “பள்ளி கொண்டீஸ்வரர்” எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மூலவரை வால்மீகிஸ்வரர் என்கிறார்கள். இவருக்கு எதிரில் இராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவாரபாலகருக்குப் பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில், துவாரபாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளது.
தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில்தான் தன் மனைவி தாராவுடன் தம்பதிகளாக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.
எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதிகளாக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை: பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவபெருமானக்கு பிரதோஷ தினத்தன்று வில்வமாலை அர்ச்சனை செய்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கண்ணீரை வரவழைத்த உண்மை சம்பவம்....

நாட்டில் ஏழைகள் ஒழிய வேண்டுமா?ஜாதி ஒழிய வேண்டுமா?
இன்று திருச்சிக்கு மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,..அங்கு நல்ல உடையனிந்து ,நகையனிந்து காரில் கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம்,அவர்கள் அமர்ந்தார்கள்,,அவர்களுக்கு அருகில் வயதான தம்பதிகள் சாதாரன உடையில் காலில் செருப்பு கூட இல்லாமல் ,தாய் தந்தையை இழந்த தனது பேரனுடன் ,அமர்ந்திருந்தனர்..அலுவலக சிப்பந்தி ஒவ்வொருவராக அழைத்தார்,,பிரகாஷ்,,785.மார்க்,என்றார்,காரில் வந்தவர்கள் எழுந்து முதல்வர் அருகில் சென்றனர் .
அவர் கோப்புகளை பார்த்துவிட்டு நீங்கள் SC,,கோட்டாவில் வருகிறீர்கள் எனவே தங்கும் விடுதிக்கும் சேர்த்து -2500-ரூபாய் கட்டி சேர்ந்து விடுங்கள் என்றார்,கட்டிவிட்டார்கள்,.அவர்கள் கிளம்பும்போது முதல்வர் உங்களுக்கு- 14000-ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் வாங்கிக்கொள்ளுங்கள்,என்றார் அவர்கள் சரி என்று கூறி சென்று விட்டனர்.
அடுத்து பிரவீன்-960-மார்க் என்று அழைத்தார்கள்,அப்போது அந்த வயதான தம்பதிகள் தங்கள் பேரனுடன் முதல்வர் அருகில் சென்றனர்,அப்போது முதல்வர் பெரியவரே நீங்கள் BC,-எனவே விடுதிக்கும் சேர்த்து -98000-ரூபாய் கட்டிவிடுங்கள் என்று கூறினார்..உடன் அவர் தன் இடுப்பிலிருந்த பணத்தை எடுத்து,என்னிப்பார்க்க கூட முடியாமல் நடுங்கும் கைகளால் அலுவலக உதவியாளரிடம் கொடுக்க,அவர் அதை எண்ணிப்பார்த்துவிட்டு ஆயிரம் ரூபாய் குறைகிறது என்று சொல்ல ,பெரியவர் மனைவியை பார்க்க அந்த வயதான பெண்மனி தனது சுருக்கு பையிலிருந்து நடுங்கும் விரல்களால் சில்லரை நோட்டுகளை எண்ணிக் கொடுக்க .பையனை சேர்த்துவிட்டு அந்த தம்பதிகள் வெளியில் செல்லும்போது,அந்த பெரியவர் தன் மனைவியின் தோளை தொட்டு ,பாக்கியம் பஸ்ஸுக்கு பணமிருக்கா என்று கேட்டார்,.
இதை பார்த்தவுடன் ,ஆயிரம் சிறை கம்பிகளையும்,பிரச்சினைகளையும் பார்த்து கலங்காத கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
இதற்காகத்தான் ஜாதிக்கொரு நீதியா?

சனி, 30 ஏப்ரல், 2016

மே 19ல் பார்ப்போம்

ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர்.
அதைக்கண்டு அங்குவந்த ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க ஆரம்பித்தன. அதைக்கண்ட விவசாயிகள் அந்த ஓநாயை விரட்டி துரத்தினர்.
ஓநாயை விவசாயிகள் விரட்டிய நேரம் ஆட்டுப்பட்டியின் ஆடுகளை அங்கு வந்த நரி கொன்று தின்ன ஆரம்பித்தது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் துரத்தி வந்த ஓநாயை விட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து நரியை விரட்டி துரத்த ஆரம்பித்தனர்.
நன்கு பசியாரிய நரியும் விவசாயிகளிடம் பிடிபடாமல் ஓடியது.
விவசாயிகள் நரியை தேடி ஓடியதை அறிந்த ஓநாய் மீண்டும் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று தின்றது.
இந்த முறை தன் குட்டிகளையும் ஓநாய் தன்னுடன் அழைத்து வந்து குடும்பத்துடன் ஆடுகளை அடித்து தின்றது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் நரியை விட்டு ஓநாயையும் அதன் குட்டிகளையும் விரட்டத்தொடங்கினர்.
அந்த நேரத்தில் ஓய்விலிருந்த நரி தன் தோழியான குள்ளநரியையும் கூட்டிவந்து ஆட்டினை அடித்து சாப்பிட ஆரம்பித்தன.
இதே கதை தொடர்கதையாகி ஆடுகளையும் இழந்து, சாப்பிடவும் வழியில்லாமல் ஓய்வு உறக்கம் இன்றி தெம்பின்றி இருந்த விவசாயிகளை நன்கு தின்று கொழுத்த ஓநாய் தன் குட்டி, அதனுடைய குட்டிகள் என எல்லாம் சேர்ந்து ஆட்டுடன் சேர்த்து விவசாயிகளையும் கடித்துக்குதற ஆரம்பித்தன.
ஓநாய்களே ஆட்டை எடுத்துக்கொண்டால் நாம் என்ன செய்வது என யேசித்த நரி தந்திரமாக ஒரு காரியம் செய்தது.
விவசாயிகளிடம் தாமக சென்று நான் திருந்தி விட்டேன், எல்லா தவறுக்கும் காரணமான என் தோழி குள்ள நரியையும் அவள் குடும்பத்தையும் துரத்திவிட்டேன், எனக்கு என யாருமே இல்லை, நான் இங்கு பட்டியிலேயே இருந்து உங்கள் ஆடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் ஓநாயையும் அதன் குடும்பத்தையும் விரட்டி அடியுங்கள் என்றது.
இந்த நரியின் கபட நாடகத்தை உண்மை என நம்பிய விவசாயிகளும் அந்த ஓநாய் குடும்பத்தை தூரமாக துரத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த துரோகி நரி தனது தோழி அதன் குட்டிகள் என பெருங்கூட்டத்துடன் பட்டியிலுள்ள ஆடுகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து எதுவும் செய்ய தெம்பில்லாமல் அழத்தொடங்கினர்.
இப்பொழுது மீண்டும் ஆட்டுப்பட்டியை கைப்பற்றபசியோடு காத்திருக்கும் ஓநாய்குடும்பம் ஒருபக்கம், உண்டு களைத்து ஓய்விலிருக்கும் நரியும், தோழியும் மறுபக்கம்.
என்ன செய்வான் விவசாயி மீண்டும் முட்டாள் தனமாக நரியையோ, ஓநாயையோ துரத்தப்போகிறானா?
அல்லது ஆட்டுப்பட்டிக்கு வீரமான நல்ல காவலனை வைக்கப்போகிறானா? .
.
.
..
.
.
.
.
.
மே 19ல் பார்ப்போம்.

எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்...

அந்த பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும்.திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தார்.அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது.என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார்.பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்."உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது.உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது.அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது.உடனடியாக அதனை கொல்லுங்கள்....!"என்பதே அது.
நீதி:உங்களை சுற்றியுள்ள அனைவரும்,உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.
2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.
5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..
8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.
9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.
10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.
15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.
17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.
19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.
21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கொடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.
23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.
25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.
26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு



திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் உள்ள ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில்.

பஸ் ரூட்: இத்திருத்தலம் செங்குன்றத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாரீஸ் கார்னரிலிருந்து மாதவரம்- செங்குன்றம் வழியாக் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்து எண்: T57, 58A & 58G

ஆலய நேரம்: காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.

மூலவர்      :  புஷ்பரதேஸ்வரர்
அம்மன்      :  சொர்ணாம்பிகை
ஊர்               :  ஞாயிறு
மாவட்டம் :  திருவள்ளூர்
தீர்த்தம்       :       சூரிய தீர்த்தம்
விருட்சம்   :      செந்தாமரை
அவதாரம்   :     சங்கிலி நாச்சியார்
முக்தி           :     கன்வ மகரிஷி

தல வரலாறு 
தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான். அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றான். அப்போது தடாகத்திலிருந்த ஒரு தாமரை மட்டும் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டான். அதை பறிக்க நினைத்தவன், நெருங்கியபோது தாமரை நகர்ந்து சென்றதே தவிர, கையில் சிக்கவில்லை. ஆச்சர்யமடைந்த மன்னன், தன் வாளால் அதை வெட்டவே, ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட மன்னன், பார்வை இழந்தான். வருந்திய மன்னன் சிவனை வேண்டினான். அவனுக்கு காட்சி தந்த சிவன், கண் பார்வை கொடுத்ததோடு, தான் அவ்விடத்தில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் தடாகத்தின் கரையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால் சிவன், 'புஷ்பரதேஸ்வரர்'' என்று பெயர் பெற்றார்.

சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

பல்லவ விநாயகர் 
விநாயகர் தலையில் கிரீடத்துடன்தான் இருப்பார். ஆனால் இங்கு கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தந்தைக்கு மரியாதை செய்யும் விதமாக, இவர் இவ்வாறு காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை 'பல்லவ விநாயகர்' என்றழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது நம்பிக்கை. கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சிலை இருக்கிறது. பல் தொடர்பான நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, யோக பட்டையுடன் காட்சி தருகிறார். கால பைரவர்,

சூரிய வழிபாடு
சித்திரை மாதம் முதல் வாரம் (1-7ம் தேதி), காலை 6:10 மணிக்கு சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரை சமயத்தில் (காலை 6-7, மதியம் 1-2, மாலை 6-7) வழிபாடு செய்வோர்க்கு ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிட்டும்.

பரிகார பூஜைகள்: சூரியன், கண் தொடர்பான நோய்களை நிர்ணயிக்கும் கிரகமாக இருப்பதால், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு சிவன், சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட கண் நோய் நீங்க பெறுகிறார்கள்.

விவாகத் தடை: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்து வர விவாகத் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
தொழில் சம்பந்தமான பிரச்சனை/சொத்துப் பிரச்சனை: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, தயிர் சாத அபிஷேகம் செய்து வர தொழில் பிரச்சனை/சொத்துப் பிரச்சனை நீங்கப் பெறும்.

குழந்தைகளின் கல்வி மேம்பட: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, கோதுமை கேசரி அபிஷேகம் செய்து வர குழந்தைகளின் கல்வி மேம்படும்.
பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்க: பிரகாரத்தில் கிரீடம் அணியாத பல்லவ விநாயகர் இருக்கிறார். தந்தைக்கு மரியாதை செயும் விதமாக, இவர் இவ்வாறு இருப்பதாக ஐதீகம். சிவனை வழிபட்ட கண்வ மகரிஷி கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். பல் நோயுள்ளவர்கள் இவருக்கு 6 வாரங்கள் 9 நெய் தீபம் ஏற்றி வழிபட பல் நோய் நீங்க பெறுவர்.

வெள்ளி, 18 மார்ச், 2016

கல்யாண வைபோகம் சிறுவாபுரியில் கோலாகலம்

            


திருமண வயது வந்தும், தங்கள் குழந்தைகளுக்கு இன்னும் திருமண கைகூடவில்லையே என கலங்கிநிற்கும் பெற்றோர்களும், திருமண வயது வந்த பெண்களும், ஆண்களும், வழிபட வேண்டிய தலம் சென்னை அருகே உள்ளது. சிறுவாபுரி என்று அழைக்கப்படும் இந்த தலம்,சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. சிறுவாபுரி  ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி  கோவில்  என்று அழைக்கப்படும் இத்  தலம், அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம் பெற்றறுள்ளது. இங்கு மணக்கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்த நிலையில், வள்ளி மணவாள பெருமானாக காட்சி அளிக்கின்றனர்.
பூச நட்சத்திரத்தில் இந்த  வள்ளி மணவாள பெருமானை  வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருமண வயது வந்த ஆண்கள், பெண்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்றால் திருமணம் விரைவில் நிறைவேறும். திருமணத் தடை ஏற்பட்டாலோ, பல ஆண்டுகளாக திருமணம் பேச்சு எடுத்து, திருமணம் தட்டி தட்டி போனாலோ,  சிறுவாபுரிக்கு வந்து  முருகனை மனம் உருகி நாடி வந்தால் கைமேல் நல்ல பலன் கிடைக்கும். இது பிராத்தனை தலம், பரிகார தலமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இங்கு தரிசனம் செய்தாலே ஜெயம் உண்டாகும்.
திருமணம் நடக்க வேண்டிய பெண்கள் ஆறுவாரமும் தவறாமல் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். பிரார்த்தனை செய்பவர்கள் வள்ளி நாயகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைப் பொருள்களுடன் மரகத விநாயகர் வள்ளி மணவாளப் பெருமான் அண்ணைமலையார், உண்ணாமுலையார், ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
மேலும் முருகன் சந்நிதியில் தரும் மாலையை திருமணமாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தைச் சுற்றி வந்த பிறகு அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடக்கும் வரையில் பாதுகாக்க வேண்டும். இதனைத் தவிர வீடு, பிள்ளைப்பேறு உடலில் உள்ள நோய், வாழ்வில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த முருகனை ஆறுவாரம் தொடர்ந்து வழிபட்டால் நாம் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். மற்ற அனைத்துப் பிரச்னைகளும் விலகும்.

6 வாரம் தொடர்ந்து வர முடியாமல் சிரமப்படுபவர்களுக்காக, சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சிறுவாபுரியில்  வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண மகோற்சவம் நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர், சிறுவாபுரியில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு, அபிஷேக ஆராதனை செய்து அன்னதானம் வழங்கி கூட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த குழுவினர், ஆறாம் ஆண்டாக கடந்த  06.09.2015 (ஞாயிற்றுக்கிழமை)  வள்ளி மணவாள பெருமான் கல்யாண மகோற்சவத்தை சிறப்பாக நடத்தினர்.  பிரார்த்தøனையாளர்களுக்கு விரைவில் திருமணம் கைகூட வேண்டி, இந்த வைபவத்தை எவ்வித கட்டணம் வசூலிக்காமல், அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்தினர்.

 காலை 5.00 மணி முதலே திருமணம் நிறைவேற வேண்டி பிரார்த்தனைக்கு பக்தர்கள் வர ஆரம்பித்தனர். வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்ற அனைவருடை பெயர் பதிவு செய்யப்பட்டு, நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. அத்துடன் முருகனின் வண்ணப்படம் அடங்கிய பைல் மற்றும் குடிநீர் பாட்டீல், குளிர்பானம், தினை உருண்டை, லட்டு அடங்கிய பை கொடுக்கப்பட்டது.
 திருமண விரைவில் கைகூட வேண்டி பிரார்த்தனைக்கு வந்த  ஆண்கள், பெண்கள்  தனித்தனியாக  கோவிலையொட்டியுள்ள திருமண மண்டபத்தில் அமரவைக்கப்பட்டனர். சுமார், 900 பேர் இந்த மஹோற்சவத்தில் பங்கேற்றனர்.
காலை 8.00 மணிக்கு காஞ்சி காமகோடி பீட, ஆஸ்தான தவில் வித்வான் டி.ஆர்.லோகநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் மஹோற்சவம் துவங்கியது. 9.00 மணிக்கு வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
காலை 10.00 மணிக்கு முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சொற்பொழிவு நடந்தது.
திருமணம் உற்சவத்தில் இருந்த வள்ளி மணவாள பெருமானுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 10.40 மணியளவில் வள்ளி மணவாள பெருமானுக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் முழுக்க திருக்கல்யாண மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்டுகளித்து பிரார்த்தனை செய்த பக்தர்கள், ஒரு நிமிடம் கண்ணை மூடி, அன்றைய நிகழ்வுகளை நினைத்தபடி, ‘திருமண கைகூடும்’ என்று குரல் எழுப்பினர். அப்போது பின்னணியில் ‘டும் டும்’ என மேளவாத்தியம் முழங்கியது. தொடர்ந்து  ஆண்களுக்கு வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்பட்டது. மேலும், மஹோற்சவத்தில்  மணமகன்,மணமகள் வீட்டார்  சார்பில் அமர்வதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மூன்று உறுப்பினர்கள்,  பிரார்த்தனையாளர்களுக்கு விட்டு கொடுத்தனர். இதை குலுக்கல் முறையிலதேர்ந்தெடுத்து, பெற்றோருடன் வந்திருந்த ஒரு பெண் , மஹோற்சவ மேடையில் அமரவைக்கப்பட்டு சடங்குகள் நடைபெற்றது.
கல்யாண மகோற்சவம் முடிந்ததும் வள்ளியும், முருகபெருமானும் சிவவாத்தியம் முழங்க, கோவில் பிரகாரத்தை சுற்றி, 6 முறை வலம் வந்தனர். அப்போது திருமண பிரார்த்தனையாளர்கள் தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு ’வள்ளி மணவாளா போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி வலம்வந்தனர்.
திருமண பிரார்த்தனைக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், அவருடன் வந்த பெற்றோர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அத்துடன், பிரசாத பையும், மரக்கன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடிய தம்பதியர்கள், மஹோற்சவத்திற்கு முதல் நாள்,  05.09.2015 அன்று மாலை 6 மணிக்கு சீர்வரிசை தட்டுடன் கோவிலை சுற்றி வலம் வந்து, நன்றி செலுத்தினர். பின்பு, அவர்களுக்கு  குழுவினர் சார்பில் பரிசும், விருந்தும் அளிக்கப்பட்டது.





கோவிலின் சிறப்பு
அருணகிரிநாதரின்  திருப்புகழில்,  இந்த தலத்தை பற்றி, நான்கு பாடல்கள் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம். அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன. கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களில்ச் சிறப்பாக பாடியுள்ளார்.8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார். மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு “சீதளவாரிஜ பாதா நமோ நம:” என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

- கார்த்திகேயன்

ஞாயிறு, 6 மார்ச், 2016

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?


மாசி மாதம், 24-ம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தசிதான் (மார்ச்-7) மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான்.
அந்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.
கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் முறை...

முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல் ஜாமத்தில் (மாலை 6 முதல் 9 மணி வரை):
ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9 முதல் 12 மணி வரை): பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை): தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும். 

அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள்...

கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். சிவராத்திரி (வைகுண்ட ஏகாதசியும்தான்) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு. தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண் டும்.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம்; அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம்.

திருவண்ணாமலை கிரிவலம்


திருவண்ணாமலை கிரிவலம்


திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பபடுகிறது. பல மா மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள் மூலம் பாராட்டுகளை பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலை சென்றடைய காட்பாடி [வேலூர்]. ரயில் நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். சிவனை அசைக்க முடியாத மலை என நம்புவதால் பக்தர்கள் சிவனடியாரை அண்ணாமலையார் என்றும் பெயர் சூட்டி வழிபடுகின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

இந்திரலிங்கம்


கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது  இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

அக்னிலிங்கம்


இரண்டாவது லிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

யமலிங்கம்


மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

நிருதி லிங்கம்




நான்காவதாக உள்ள இந்த லிங்கம் இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

வருண லிங்கம்


ஐந்தாவதாக உள்ள இந்த லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

வாயு லிங்கம்


ஆறாவதாக உள்ள இந்த லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

குபேர லிங்கம்


ஏழாவது இந்த லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

ஈசானிய லிங்கம்


கடைசி லிங்கம்.  வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை


திருவண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். திருவண்ணாமலை கோயிலை பற்றி பல கவிகள் கவி இயற்றி பாடியுள்ளனர். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில் உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள் இங்கு கிடைத்த செம்பு தட்டுகளால் [ செப்பு தகடுகளால் ] கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின் புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது. அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள், கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம் அடைய உதவியுள்ளனர்.

மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம். ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை. இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.